ஞாயிறு, 27 ஜூன், 2010

நான்


புவியியல், பூலோகம், அறிவியல், வேதியல் என்று எந்த இயலிலும் கொடிகட்டிப்பறக்கும் அளவுக்கு சாதனைச் செய்துவிட்டு இங்கு இடுகையிடவில்லை நான்.
இயற்கை இயற்கையாகவே என்னை இயற்கையை நேசிக்கச் செய்துவிட்டது. நாம் ஒருத்தியை நேசிக்கும்போது, மன்னிக்கவும், நான் ஒருத்தியையோ அல்லது நீங்கள் ஒருத்தியையோ நேசிக்கும்போது அவளை எப்படியெல்லாம் சிரத்தையெடுத்து, அக்கறையெடுத்து கவனித்துகொள்வோம்? அவளுக்கொன்றென்றால் எப்படித் துடிப்போம்? அவள் நலமாக இருக்க என்ன சாகசமெல்லாம் புரிவோம்?
அதுபோலவே இயற்கை மீது நான் கொண்ட நேசத்தைதான் இங்கு இடுகையிட்டு புலப்படுத்தி அவளைக் காக்க என் பங்கைச் செய்கிறேன்.
என் இடுகைகளில் இயலும்வரை ஆதாரப்பிழைகள் நேராமல் நான் பார்த்துகொள்கிறேன். அதற்காக நான் விரும்பிப்படிக்கும் இதழ்கள், ஊடகச்செய்திகள், இணையப்பக்கங்கள் என்பவற்றை மேற்கோளாகக்கொண்டே இங்கு உண்மையை உணர்த்துகிறேன்.

எவ்வளவு முயன்றாலும் சந்திப்பிழைகளை மட்டும் களைய கடினப்படுகிறேன்.
எனவே, அதிகமான அல்லது அபாயமான பிழைகளை இந்த வலைமனையில் கண்டால் தயவுசெய்து கருத்துரையுங்கள்.

இயற்கையை நேசியுங்கள்.

0 comments:

கருத்துரையிடுக

 
Copyright © மனிதம்
Theme by BloggerThemes & WPThemesFree Sponsored by iBlogtoBlog
This template is brought to you by : allblogtools.com | Blogger Templates