கிறுக்கன் கிறுக்குவான் - அதை
கிறுக்கல்களெனக் கொண்டாடுவர்..
சந்தங்களுடன் சில நிறுத்தற் குறிகள் - அது
கிறுக்கப் பட்டவை மட்டுமே..
யாவர்க்கும் வரும் யாப்பு- அதை
யாசித்த பின்னர் வருவதே சிறப்பு..
எறிந்த இடமெல்லாம் கரியாகும்-அஃது
எரியப்பட்ட இடமெல்லாம் கவியாகாது..
அறியாதவன் அளித்தல் அரிதாவது நலம்
அறிந்தவர்போல் அள்ளித் தெளித்தல் மலம்..
-குமரன்
வாத்தியாரின் வாழ்த்துக்கள்!
5 மணிநேரம் முன்பு
0 comments:
கருத்துரையிடுக