துயில் துறந்து
இருள் துரத்தும் சுடரே.. -நீ
ஒளி அருளி
களி பெருகச் செய்வாயென்பதே
அவர் இலக்கு(ஓ)?..
தூண்டுகிறாரே எம்மை
தீண்டுகிறாரே என
களிப்புற்று நீ
கரை கடந்து-பிறர்
கலங்கஞ் செய்தல் ஆகுமோ?..
பொறிபற்றி
திரிசுற்றி
சுடராயெரி
மகிழ்ச்சி..
கட்டற்று
காற்று கலந்து
காடழித்தாலும் கவலை
வீடழித்தாலும் கவலையே..
ஒளி அருளினால்
வணங்கும் -நீ
ஒழிக்க விழைந்தால்
சுணங்கும்..
அகலில் ஒளித்தால்
அல் அழகாகும் -நீ
கொந்தளித்தால்
இல் இரண்டாகும்..
ஆவளியில் காணவே
ஆவலுண்டு
அழகுமுண்டு-உன்னை
அருகி ஆசி பெற
அடங்கியிரு
அமைதியாயுமிரு...
-குமரன்
.
0 comments:
கருத்துரையிடுக