காதலன்று
கூட நேர்ந்தும்
காத்தல் நன்று!!
கண்களைக் கண்கள்
மென்று தின்று
கண்ணியம் காப்பதே
காதலின் கன்று!!
தனிமையிலும் நீ
தள்ளியே நின்று
தாமரைச் சிரிப்பை
அவிழ்த்தாய் அன்று!!
காதல் காமம்
அனைத்தையும் கொன்று
நட்பினால் நெருங்கினாய்
மனதை வென்று!!
-குமரன்
0 comments:
கருத்துரையிடுக